search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் குற்றச்சாட்டு"

    • கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 116 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள காலிஇடத்தில் பஸ்நிலையம் அமைக்க 1.54 ஏக்கர் நிலம், நூலத்துக்காக 3625 சதுர அடி நிலம், ஆஸ்பத்திரி கட்ட 4368 சதுர அடி நிலம், தபால் நிலையம் அமைக்க 3675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் முதல்கட்டமாக 6920 சதுர மீட்டர் இடத்தில் 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி நிர்வாகம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட்டுவசதி வாரிய இடத்தினை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்று உள்ளது. பஸ்நிலையம், நூலகம், தபால் நிலையம், ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இதுவரை அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.
    • வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினமாக நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டனி, வேளாண் அலுவலர் திருமால், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா உள்ளிட்ட அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    அப்போது வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.

    அவர்கள் மூட்டையை பிரித்து அதில் இருந்த குப்பையை அங்கு கொட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊராட்சியில் சேரும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. அள்ளப்படும் குப்பைகளும் எம்.சி., பள்ளி சாலையில் உள்ள வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் கூறியதாவது:-குப்பைகள் அள்ளுவதற்கோ, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவோ போதிய நிதி அரசிடமிருந்து வருவதில்லை. அதனால்தான் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கிராம சபை கூட்டத்தில் புகார் மனுவிற்கு பதில், குப்பைகளை கொட்டி பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் மகராஜகடை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பேருந்துகள் கூட குறைவாகவே இயக்கப்படுகின்றன.
    • அறுவை சிகிச்சையுடன் கூடிய அவசர கால மருத்துவமனையை இப்பகுதியில் அமைக்க வேண்டும் .

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பாப்பிரெட்டி சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.

    பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளும், 19 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

    அன்றாட தேவைக்காக சேலம் மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பேரூராட்சியில் தங்கள் அன்றாட தேவைக்கான அடிப்படை வசதிகளுக்கு வந்து செல்லும் பகுதியாகவும் இருந்து வருகிறது.

    ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு மூலமாக உருவாக்கப்பட்டது.

    பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்த உள்ள இப்பகுதி மக்கள், சிறுதானியங்கள், நெல், மரவள்ளி, கரும்பு, கிழங்கு, வாழை, பாக்கு ,புளி, கடலை, வெற்றிலை, பூ போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு நீர் ஆதாரமாக வாணியார் நீர்த்தேக்கமும், நிலத்தடி நீர், ஆழ்துளை கிணறுகள், பாசன கிணறுகள் பயன்படுகின்றன.

    மேலும் இந்த தொகுதியில் உள்ள மக்கள் கூலி தொழிலாளிகளாக பெங்களூரு, கோவை ,சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று வருவாய் ஈட்டி வருகின்றனர்.

    தொகுதி தலைநகரமாக பாப்பிரெட்டிப்பட்டி இருந்தாலும் வளர்ச்சி என்பது மந்த கதியில் உள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பேருந்துகள் கூட குறைவாகவே இயக்கப்படுகின்றன.

    சேலம், சென்னை, கோவை போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாமியாபுரம் கூட்டு ரோடு வழியாக 100-க்கணக்கில் சென்றாலும் , பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதில்லை.

    இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் சாமியாபுரம் கூட்ரோடு சென்று பேருந்து மூலம் செல்லும் நிலை நீடிக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ,கடத்தூர் போன்ற பேரூராட்சிகள் இருந்தாலும் கூட தரமான மருத்துவ வசதியுடைய மருத்துவமணை இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் சாலை விபத்துக்கள், அவசரகால மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 50 கிலோமீட்டர் உள்ள சேலம், தருமபுரி சென்று சிகிச்சை பெறும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் உயிர் இழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

    எனவே அறுவை சிகிச்சையுடன் கூடிய அவசர கால மருத்துவமனையை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சுற்றுலாத்தலமான ஏற்காடு மலையில் உள்ள 30-க்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவை, மருத்துவ வசதி,கூலி வேலைக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பிற்காகவும் பொம்மிடி , பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் ஏற்காட்டிற்கு பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி போன்ற பகுதியில் இருந்து தார் சாலை வசதி இருந்தும் பேருந்து வசதி இல்லை.

    பேரூந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் 30 கிலோமீட்டரில் ஏற்காடு சென்ற அடையலாம்.

    இந்த தொகுதி விவசாய மக்களுக்கு, விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் வகையில் பதப்படுத்தும் கிடங்குகள் ஏற்படுத்திக் கொடுத்தால் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும், வெளி மாவட்டங்களுக்கு சிறந்த முறையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வரு‌ஷநாடு வனப் பகுதியில் சமூக விரோதிகள் தீ வைப்பது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட எருமைச் சுனை, கண்டமனூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம் மலைப் பகுதியில் நேற்று திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர்கள் இக்பால் (வரு‌ஷநாடு), குமரேசன் (கண்டமனூர்) தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காற்று பலமாக வீசுவதால் காட்டுத் தீ மளமளவென பரவி அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாளை ஆடி-18 கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்கள் குல தெய்வ கோவில் வழிபாட்டுக்கு சிலர் பலி கொடுப்பதுண்டு. இதற்காக வனப்பகுதியில் தீ வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    மேலும் அடுப்பு கரிக்காகவும் சிலர் இவ்வாறு தீ வைக்கின்றனர். இப்பகுதியில் வேட்டை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் வனப்பகுதி மற்றும் விலங்குகள் அழியும் சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் சமூக விரோத கும்பலை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×